English Tamil Malay

சியோல் டிச 29
அண்மையில் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்த உலக சமாதான உச்ச நிலை மாநாட்டில் 121 நாடுகளிலிருந்து சுமார் 1800 பேராளர்கள் கலந்து கொண்டனர்.
தென் கொரியாவில் தலைமையகத்தை கொண்டிருக்கும் HWPL அமைப்பு ஆண்டுதோறும் இந்த சமாதான மாநாட்டை நடத்தி வருகிறது.


கோவிட் 19 தாக்கத்தின் காரணமாக மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் 18 முதல் 21 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக இந்த மாநாடு நடைபெற்றது.
கடந்த 2013-ல் ஒரு முன்னாள் போர் வீரரான Lee Man-hee தலைமையில் HWPL சமாதான இயக்கம் சியோல் நகரில் நிறுவப்பட்டது.
உலகில் சமாதானம் நிலைநிறுத்தப்பட வேண்டும் மற்றும் போர் கைவிடப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆண்டுதோறும் தென் கொரியாவில் இந்த சமாதான உச்ச நிலை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.


இம்முறை நடைபெற்ற இந்த மாநாட்டில் மலேசியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், உக்ரேன், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, ரோமேனியா, இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டனர்.
உலக நாடுகளின் முன்னாள் அதிபர்கள், முன்னாள் பிரதமர்கள், சமய தலைவர்கள், அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
உலக அமைதிக்காக ஒன்று படுவோம்….!

உலக அமைதிக்காக நாம் ஒன்று பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் சமய தலைவர்களை HWPL தலைவர் Lee Man-hee கேட்டுக்கொண்டார்.
போரினால் ஏற்படும் விபரீதங்களை தாம் கண்கூடாக பார்த்துள்ளதாக ஒரு முன்னாள் போர் வீரரான அவர் குறிப்பிட்டார்.
உலகில் பல மோதல்களுக்கு அரசியலே முக்கிய காரணமாக அமைந்து வருகிறது என்றார் அவர்.
‘போர் வெடித்தால் அரசியல்வாதிகள் போருக்கு சண்டையிடுவதில்லை. இதுபோன்ற போர்களில் இளைஞர்கள் தான் பலியாகிறார்கள்’ என அவர் சுட்டி காட்டினார்.
சமாதானத்தை வளர்க்க 32 முறை உலக நாடுகளுக்கு தாம் பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தென் கொரியாவில் நடந்த உலக சமாதான மாநாட்டில் 1800 பேராளர்கள் கலந்து கொண்டனர்
சியோல் டிச 29
அண்மையில் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்த உலக சமாதான உச்ச நிலை மாநாட்டில் 121 நாடுகளிலிருந்து சுமார் 1800 பேராளர்கள் கலந்து கொண்டனர்.
தென் கொரியாவில் தலைமையகத்தை கொண்டிருக்கும் HWPL அமைப்பு ஆண்டுதோறும் இந்த சமாதான மாநாட்டை நடத்தி வருகிறது.
கோவிட் 19 தாக்கத்தின் காரணமாக மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் 18 முதல் 21 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக இந்த மாநாடு நடைபெற்றது.
கடந்த 2013-ல் ஒரு முன்னாள் போர் வீரரான Lee Man-hee தலைமையில் HWPL சமாதான இயக்கம் சியோல் நகரில் நிறுவப்பட்டது.


உலகில் சமாதானம் நிலைநிறுத்தப்பட வேண்டும் மற்றும் போர் கைவிடப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆண்டுதோறும் தென் கொரியாவில் இந்த சமாதான உச்ச நிலை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இம்முறை நடைபெற்ற இந்த மாநாட்டில் மலேசியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், உக்ரேன், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, ரோமேனியா, இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டனர்.
உலக நாடுகளின் முன்னாள் அதிபர்கள், முன்னாள் பிரதமர்கள், சமய தலைவர்கள், அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

உலக அமைதிக்காக ஒன்று படுவோம்….!உலக அமைதிக்காக நாம் ஒன்று பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் சமய தலைவர்களை HWPL தலைவர் Lee Man-hee கேட்டுக்கொண்டார்.
போரினால் ஏற்படும் விபரீதங்களை தாம் கண்கூடாக பார்த்துள்ளதாக ஒரு முன்னாள் போர் வீரரான அவர் குறிப்பிட்டார்.
உலகில் பல மோதல்களுக்கு அரசியலே முக்கிய காரணமாக அமைந்து வருகிறது என்றார் அவர்.
‘போர் வெடித்தால் அரசியல்வாதிகள் போருக்கு சண்டையிடுவதில்லை. இதுபோன்ற போர்களில் இளைஞர்கள் தான் பலியாகிறார்கள்’ என அவர் சுட்டி காட்டினார்.
சமாதானத்தை வளர்க்க 32 முறை உலக நாடுகளுக்கு தாம் பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலகில் சமாதானம் வென்று விட்டால் வருத்தப்படும் வகையிலான மரணங்கள் இருக்காது. மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்நாளை தொடர்வார்கள். உலகில் அமைதி மற்றும் சமாதானம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே தமது இலக்கு என அவர் சொன்னார்.
உலகில் சமாதானத்தை நிலை நாட்ட 130 நாடுகளில் HWPL தனது கிளைகளை அமைத்து இயங்கி வருவதாக Lee Man-hee தெரிவித்தார்.
உலக அமைதிக்காக சமாதான தூதர்கள் மூலம் தனது நடவடிக்கைகளை HWPL மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உச்சநிலை மாநாட்டில் மூன்றாவது ரோமேனியா அதிபர் பேராசிரியர் டாக்டர் கொன்ஷ்டன்ஸ்கு உரையாற்றினார்.
உலக அமைதிக்காக HWPL அமைப்பு அயராது போராடி வருவதை அவர் வெகுவாக பாராட்டினார்.
உலக சமாதானத்திற்காக ஒரு சட்டத்தை இயக்கி ஐநா சபையில் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் HWPL நடத்தி வரும் இந்த போராட்டம் ஒரு நாள் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் தலைமையில் அமைதி நடவடிக்கைகள், சமாதான கல்வி வழங்குதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை HWPL மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என அவர் சொன்னார்.


இவ்வாண்டு மாநாட்டில் HWPL சமாதான நடவடிக்கைகளுக்கு தங்களை அர்ப்பணித்த 13 நபர்களுக்கு HWPL சமாதான விருது வழங்கப்பட்டது.
HWPL தலைவர் Lee Man-hee இந்த விருதுகளை வழங்கினார்.

3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்தடைந்த உலக நாடுகளில் பேராளர்களே அன்பாக வரவேற்று, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதில் HWPL அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது.
30 பிரிவுகளாக நடந்த நிகழ்ச்சிகளில் மொழிபெயர்ப்பாளர்கள் குழு தனது கடமையை சிறப்பாக செய்தது.
இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பேராளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் தேவையானால் மருத்துவ வசதிகளை செய்து தருவதிலும் HWPL அமைப்பு சிறப்பாக தனது கடமையை செய்தது.

 98 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *