English Tamil Malay

சியோல் செப் 16
தென் கொரியா தலைநகரான சியோல் மாநகரில் நடைபெறும் 9 ஆவது உலக சமாதான உச்சநிலை மாநாட்டில் உலகளாவிய சேர்ந்த சுமார் 1,800 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தென் கொரியாவை மையமாக கொண்டுள்ள உலக சமாதான இயக்கமான HWPL இந்த உலக சமாதான உச்சநிலை மாநாட்டை நடத்துகிறது.
வரும் செப் 18 ஆம் தேதி முதல் செப் 21 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வெகு விமர்சையாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.

உலக அமைதிக்கு வழி வகுக்க HWPL இயக்கம் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த சாதனைகள் என்ன என்பது குறித்து இந்த உலக சமாதான உச்சநிலை மாநாட்டில் விரிவாக பேசப்படவிருக்கிறது.

உலகளாவிய நிலையிலிருந்து அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், இளைஞர் மற்றும் மகளிர் அணியினர், ஊடகவியாளர்கள், அரசு சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போர் முன்னாள் ராணுவ வீரரான HWPL இயக்கத்தின் தலைவர் Man Hee Lee இந்த உச்சநிலை மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.
உலக சமாதானத்திற்காக கடந்த 9 ஆண்டுகளாக சியோல் மாநகரில் உலகத் தலைவர்களை ஒன்றிணைத்து போராடி வருகிறார்.

உலக சமாதானத்திற்காக கடந்த 9 ஆண்டுகளாக HWPL நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு ஐக்கிய நாட்டின்(UN) அங்கீகாரம் கிடைக்கும் என Man Hee Lee சூளுரைத்து வருகிறார்.

உலக சமாதானத்திற்காகவும் போர்களை கைவிடவும் அனைத்துலக சட்டத்தை இயற்றுவது குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரையை ஐநா சபைக்கு கொண்டு செல்வது குறித்து, இம்முறை நடைபெறும் அனைத்துலக சமாதான உச்சநிலை மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
உலகளவியச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், கல்விமான்கள் மற்றும் சமய தலைவர்கள் அனைத்துலக சட்டம் ஒன்றை இயற்றுவது குறித்து தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உள்ளனர்.

இந்த அரிய நோக்கத்திற்காக HWPL தலைவர் Man Hee Lee உலக நாடுகளுக்கு சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார்.
‘அமைதி பணிக்காக இதுவரை 32 முறை உலக நாடுகளுக்கு நான் பயணம் செய்து வந்துள்ளேன்’ என Man Hee Lee கூறினார்.


உலகில் அமைதியும் சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நமது தார்மீக நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
குடும்பங்களில், பள்ளிகளில், உலக நாடுகளில் மற்றும் அமைப்புகளில் சமாதானம் ஒரு முக்கிய கருவியாக இருக்க வேண்டும்.


ஒரு தனி நபர் கூட அமைதியை நிராகரிக்கவில்லை.
இந்த நிலையில் உலக சமாதானத்தை நிச்சயம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டார்.

 112 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *