பினஙலகு மார்ச்சு்10-பினாங்கு மாநில மஇகா மகளிர் பகுதி ஏற்பாட்டில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி பினாங்கு மாநில மஇகா கட்டிடத்தில், மாநில மஇகா மகளிர் பகுதி தலைவி திருமதி தனலெச்சுமி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அனைவரும் அளித்த மதிப்புமிக்க ஆதரவிற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் மாநில மகளிர் பகுதி தலைவி திருமதி தனலெச்சுமி.

இந்நிகழ்ச்சியில் குறிப்பாக திரு கேசவன், டத்தோ மரியாதாஸ் கோபால், டத்தோ காருனாகரன், டத்தின் கல்யாணி, பெர்மாத்தாங் பாவ் மஇகா தொகுதியின் மகளிர் தலைவி திருமதி புஷ்பா, பகான் மஇகா தொகுதியிலிருந்து திருமதி விமலா, பாலிக் புலாவிலிருந்து சீதா, நிபோங் தெபலிலிருந்து பார்வதி, மேலும் சாரேஸ் மற்றும் தமரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
11 total views, 1 views today