English Tamil Malay


கோலாலம்பூர் ஆக 31
கோவிட் 19 தொற்றை எதிர்த்துப் போராட மலேசியர்கள் ஒன்றிணைய வேண்டுமென மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா தேசிய தின வாழ்த்து செய்தியில் வலியுறுத்தினார்.

நாடு எதிர்நோக்கும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மலேசியர்கள் தங்களின் கருத்து வேறுபாடுகளை களைந்து இந்த போராட்டத்தில் இறங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சில பொறுப்பற்ற தரப்பினர் எஸ்ஒபி நிபந்தனைகளை மீறுவதால் சமூகம் பாதிக்கப்படுவதோடு தேசிய மறுமீட்சி திட்டம் தடை படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களின் அரசியல் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த போராட்டத்திலிருந்து சுதந்திரம் பெற கவனம் செலுத்தும்படி அரசியல்வாதிகளுக்கு அவர் நினைவுறுத்தினார்.

அதேவேளையில் மக்கள் எஸ்ஓபி நிபந்தனைகளை கடுமையாக கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.

 131 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *