கோலாலம்பூர். ஏப்ரல் 14-மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் 23 வது ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் சிலாங்கூர் சீன எசெம்பிளி மண்டபத்தில் நடைபெறும்.
இந்தத் தேர்தல் பொதுக்கூட்டம் மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுதந்திரம் தங்கையா தலைமையில் நடைபெறும் 2023ஆம் ஆண்டில் சந்தா செலுத்திய சங்க உறுப்பினர்கள் மட்டும் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
பிற்பகல் 12 மணி முதல் மதிய உணவுக்கு பின் இரண்டு மணி முதல் மாலை 4.30 வரை தேர்தல் கூட்டம் நடைபெறும். தேர்தல் கண்காணிப்பு அதிகாரியாக டத்தோ கனி செயல்படுவார்.
முன்னாள் மனிதவள அமைச்சர் சிவக்குமார், ம இ கா தேசிய உதவி தலைவர் டத்தோ மோகன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
நீண்ட காலமாக நம் சங்கத்தில் நீடித்து வரும் பெர்மிட் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். எனவே சங்க அங்கத்தினர்கள் இந்த தேர்தல் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என சங்க செயலாளர் ராஜசேகர் அழைப்பு விடுக்கிறார்.
+++
25 total views, 1 views today