English Tamil Malay

காராக் டிச 23
கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமது தொகுதி மக்களுக்கு பாக்காத்தான் ஹராப்பான் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தீவிரமாக உதவி வருகிறார்.

தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் இருந்து வரும் மக்களுக்கு மெத்தை,தலையனை,போர்வை மற்றும் துணிமணிகளை தமது சட்ட மன்ற அலுவலகம் வழங்கிவருவதாக காமாட்சி கூறினார்.

தாமான் ஸ்ரீ பாயு, தாமான் இன்டா பிரிவு 1&2 சேர்ந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதேப் போல கம்போங் லெங்கோங் மற்றும் காராக் செத்தியாவில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் இருந்து வரும் மக்களுக்கு தேவையான பொருளுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த கடுமையான வெள்ளத்தால் தமது தொகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளத்தால் அனைத்து உடமைகளையும் இழந்துள்ள தமது தொகுதி மக்களுக்கு பகாங் மாநில அரசாங்கம் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில் நல் உள்ளங்கள் தமது தொகுதி மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என காமாட்சி கேட்டுக்கொண்டார்.

 267 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *