English Tamil Malay

கோலாலம்பூர் டிச 7
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தின்போது ராதா ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹாலிமா சாதிக் கூறினார்.

நாடு ஒமிகிரோன் தொற்றின் மிரட்டலை எதிர்நோக்கி உள்ளதால் அரசாங்கம் இந்த முடிவை செய்துள்ளதாக இன்று மக்களவையில் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசம் கொண்டாட்டத்திற்கு எஸ்ஒபி பட்டியல் ஒன்றை அரசாங்கம் தயார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய கோவிட் 19 தொற்றினால் தைப்பூச ரத ஊர்வலத்தை நாம் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழாவை விமர்சையாக கொண்டாடும் பினாங்கு, கெடா, சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 இந்தியத் தலைவர்களுடன் தமது அமைச்சு இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் சொன்னார்.

இந்த பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

 178 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *