English Tamil Malay

கோலாலம்பூர் டிச 1-கூட்டரசு பிரதேச சிறார்களுக்கான (7-11 வயது) ஓட்டப்பந்தய போட்டி வரும் டிச 4 சனிக்கிழமை நடைபெற இருப்பதாக கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் கூறினார்.

சிறார்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம், மைலோ ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் விளையாட்டு மன்றம் இந்த போட்டியை நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புக்கிட் ஜாலில் உள்ள தேசிய விளையாட்டு மன்றத்தின் மினி அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறும் என்றார் அவர்.

திடல் மற்றும் தடை ஓட்டம் உட்பட 34 போட்டிகள் நடைபெற உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 7-9 மற்றும் 10-11 வயது உட்பட்டு இரண்டு பிரிவுகளாக இந்த போட்டி நடைபெறும் என்றார் அவர்.
கோவிட் 19 தாக்க காலத்திலும் சுமார் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் தெரிவித்தார்.

எஸ்ஒபி நிபந்தனைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்படும் என புலேந்திரன் தெரிவித்தார்.

 213 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *