மலாக்கா நவ 21
மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் படுதோல்வி அடைந்துள்ள போதிலும் அந்த கூட்டணி கலைக்கப்படாது என அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.
தேசிய முன்னணிக்கு ஒரு சவால் மிக்க எதிர்கட்சி கூட்டணியாக பெரிக்காத்தான் நேஷனல் இருந்து வரும் என அவர் குறிப்பிட்டார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை எதிர்த்து போராடும் தனது கொள்கைகளை பெரிக்காத்தான் நேஷனல் தொடர்ந்து கடைபிடித்து வரும் என பெர்சாத்து தலைவருமான அவர் சொன்னார்.
நேற்று நடந்த மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
222 total views, 1 views today