அகல்யா
கோலாலம்பூர், பிப் 24
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதில் முதல் மலேசியராக முதல் தடுப்பூசியை பிரதமர் முகைதீன் போட்டுக் கொண்டார்.
இன்று மதியம் 2.40 மணிக்கு மேல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
பிரதமருடன் சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நீர் இசாம் உட்பட முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மலேசிய அரசாங்கம் 3 லட்சம் பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டது. மேலும் நேற்று இரண்டு லட்சம் தடுப்பூசிகள் பெற்றது. இன்று தொடங்கி நான்கு மாதங்களுக்கு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது
240 total views, 1 views today