English Tamil Malay

ஊத்தான் மெலின்தாங் அக் 16
இந்கு வறுமையில் வாடும் ஒரு குடும்பத்திற்கு மஇகா பாகான் டத்தோ தொகுதி தலைவர் டத்தோ எஸ். சுப்ரமணியம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கி உதவினார்.

அதே வேளையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு சக்கர நாற்காலியும் அன்பளிப்பு செய்தார்.
கோவிட் 19 தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அந்த குடும்பத்தினர் தமது உதவியை நாடியதாக டத்தோ சுப்ரமணியம் கூறினார்.

ஊத்தான் மெலின்தாங் சட்டமன்ற அலுவலகத்தின் மூலம் தம்மால் இயன்ற உதவிகளை இவ்வட்டார மக்களுக்கு தாம் உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 195 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *