சென்னை-20
சசிகலா அடுத்தகட்ட அரசியல் நகர்வை முன்னெடுக்கும் வகையில் இரு திட்டங்களை வைத்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சிறையிலிருந்து சென்னை திரும்பியதும் அதிமுகவினர் சசிகலாவை நோக்கி வருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி வராதது சசிகலாவை பல்வேறு யோசனைகளுக்குள் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருக்கும் பட்சத்தில் தலைவராக சசிகலாவை நியமித்து 234 தொகுதியிலும் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளலாம். சிறு கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கலாம் என்ற திட்டமும் சசிகலா வசம் உள்ளது.
179 total views, 1 views today