English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் அக் 11
கடந்து 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பினாங்கில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பினாங்கு மக்களின் விவகாரத்தில் மாநில அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைகளை தேடித் தருவதில் சமூகப் பாதுகாப்பு கழக்கத்துடன்(சொக்சோ) மாநில அரசாங்கம் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பினாங்கில் 11,996 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் 3.5 விழுக்காடு முதல் 3.9 விழுக்காடாக குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 236 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *