English Tamil Malay

புத்ரா ஜெயா அக் 2
மலேசியா எனது இரண்டாவது வீடு (எம்எம்2எச்) திட்டத்திற்கான புதிய நிபந்தனைகளை அரசாங்கம் தளர்த்த வேண்டும் என கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

இந்த திட்டத்திற்கான புதிய நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படலாம் என்றார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியா எனது இரண்டாவது வீடு முகவர்கள் சங்க தலைவர் லிம் கோக் சாயுடன் இணைந்து சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மன்ட் சந்தாரவுடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு அவர் பேசினார்.

உள்துறை அமைச்சு, சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சு இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என துணை அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார்.
உள்துறை அமைச்சின் புதிய நிபந்தனைகளால் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக டோமினிக் சுட்டிக்காட்டினார்.

எம்எம்2எச் திட்டத்திற்கான நிபந்தனைகள் வளர்க்கப்பட்டார் அந்நிய முதலீடு மட்டும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

 238 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *