English Tamil Malay

கோலாலம்பூர் செப் 27
பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி உயர்ந்தது ஒரு அதிர்ஷ்டம் தான் என்று கூறவேண்டும் என முன்னாள் தற்காப்பு துறை அமைச்சர் லிவ் சின் தோங் கூறினார்.

பிரதமர் பதவிக்கு உயர சூழ்நிலைகள் அனைத்தும் இஸ்மாயில் சப்ரிக்கு சாதகமாக அமைந்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மற்றும் அவரின் அமைச்சரவை ராஜினாமா செய்வதற்கு முன்பாக 40 நாட்களுக்கு மட்டுமே இஸ்மாயில் சப்ரி துணை பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவி வகித்துள்ளார்.

முஹிடினின் ராஜினாமாவை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் உயர்த்தப்பட்டுள்ளார் என்றார் அவர்.
கடந்த 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இதர பிரபல அம்னோ தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாததால் அதன் காரணமாக இஸ்மாயில் சப்ரி நன்மை அடைந்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் அக்கட்சியின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் ஆகியோர் எம்பிக்களாக இல்லாதது இஸ்மாயில் சப்ரிக்கு சாதகமாக அமைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 158 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *