English Tamil Malay

jllகோலாலம்பூர் செப் 24
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக தமது 3 உயர்நிலை அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பொறுப்பேற்று மலேசிய ஊழல் தடுப்பு (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அசாம் பாக்கி விடுப்பில் செல்ல வேண்டும் பாக்காத்தான் ஹராப்பான் உதவித் தலைவர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக 3 எம்ஏசிசி உயரதிகாரிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும் பாக்காத்தான் ஹராப்பானை பொறுத்தவரை இது ஒரு கடுமையான விவகாரமாகும். இந்த குற்றச்சாட்டு குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்பதால் தலைமை ஆணையர் தற்காலிகமாக பதவி விலகுவது சரியான ஒன்று.
மேலும் இந்த கடுமையான குற்றச்சாட்டை விசாரிக்க பேரரசரின் அனுமதியுடன் ஒரு அரச விசாரணை ஆணையம் அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இந்த விவகாரத்தில் உண்மையிலே என்ன தான் நடந்துள்ளது என்பது மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்தார்.

 260 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *