English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா செப் 19
ஜாமீன் தொகை செலுத்தியும் தனித்து வாழும் தாய் ஒருவரை இரவு முழுவதும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவத்திற்கு போலீஸ் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் சாடினார்.

போலீஸாரின் இதுபோன்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீஸ் புகார்கள் மற்றும் முறைகேடுகள் மீதான ஒரு சுய ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

தமது ஜாமீன் தொகையை செலுத்தியும் இரவு முழுவதும் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து 5 பிள்ளைகளுக்கு தாயான சரோஜினி தேவி கிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு எதிராக புகார் செய்துள்ளார்.

இந்த ஜாமின் தொகையை செலுத்திய சரோஜாதேவியின் மகள் நீதிமன்றத்திலிருந்து விடுவிப்பு கடிதத்தை பெற தவறிவிட்டதாக போலீசார் தந்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

கை விலங்கிடப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட 46 வயதுடைய சரோஜினி போதை பித்தர்கள் வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் அறையில் வைக்கப்பட்டார் என்பது எந்த விதத்தில் நியாயம் என ஜசெகா உதவித் தலைவருமான குலா வினவினார்.

வார இறுதியில் நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும் என்பதால் அந்த மாது மூன்று இரவுகள் சிறையில் கழிக்க வேண்டும் என்று தெரிந்தும் வெள்ளிக்கிழமை அந்த மாதிரி போலீசார் கைது செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அக்கறை கொண்ட மாஜிஸ்ட்ரேட் தலையீட்டால் மறு நாள் சனிகிழமை அந்த மாது விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அந்த மாஜிஸ்ட்ரேட் டிற்கு நன்றி கூற வேண்டும் என்றார் அவர்.

கடந்த ஜூலையில் தமது நாய் அண்டைவீட்டார் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்திற்காக சரோஜா கைது செய்யப்பட்டார்.

 287 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *