English Tamil Malay

பட்டர்வொர்த் செ 13 -செபராங் பிறை மத்திய மாவட்டம் தாமான்்கெபுன் சிரே அடிக்குமாடி குடியிருப்பு வீடமைப்பு பகுதியில் சந்திரசேகரன் கருப்பையா வயது 68 மாரடைப்பால் திடீர் மரணமுற்றதை தொடர்ந்து அக்குடும்பத்தினர் இறுதி சடங்கிற்க்கு போதிய பண வசதி இல்லாத காரணத்தினால் பினாங்கு மாநில கலை,கலாச்சார,சேவை நற்பணி மன்றம் முன் வந்து இறுதி சடங்கிற்கான உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்தாக மன்றத்தின் தலைவர் பாலன் நம்பியார் கூறினார்.

கோவிட்19 தொற்று காரணத்தினால் சில குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் திடிர் என ஏற்படும் இறப்புகளுக்கு கூட அக்குடும்மபங்கள் பெரிதும் பரிதவிக்கின்றனர் என பாலன் நம்பியார் மேலும் கூறினார்.

இதனிடையே பினாங்கு மாநில கலை,கலாச்சாரம்,சேவை நற்பணி மன்றத்தின் மூலமாக வசதி குறைந்த மக்களுக்கு என்றும் முன்னிருந்து உதவிகளை செய்து வருகிறது என்றும் மறணமுற் சந்திரசேகரன் அவர்களின் இறுதி சடங்கிற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் பேராசிரியர் பி.ராமசாமிக்கும்,நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் மற்றும் ஷாம் மரண சடங்கு நிர்வாக நிறுவனத்துக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கலமான சந்திரசேகரன் அவர்களின் இறுதி சடங்கு இறுதி சடங்கிற்க்கு பிறகு பட்டவொர்த் ஜாலான் சீராமில் உள்ள இந்து அறப்பணி வாரியத்துக்கு இடுகாட்டில் எரியுட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

 498 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *