English Tamil Malay

செம்பொர்னா,செப் 08வரும் வியாழக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருக்கும், சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மாணவர்களுக்கு, கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும்.

இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டப் பின்னர், மேல் நடவடிக்கைக்காக, தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் கொண்டு செல்லப்படும் என்று, சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.

இக்கூட்டத்தில், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மட்டுமின்றி, சுகாதாரம் மற்றும் கல்வித்துறை சார்ந்த மேலும் சில அம்சங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவிருப்பதாக கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இதனிடையே, தற்போது சபாவில் புறநகர் பகுதி மக்களிடையே கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

CANSINO வகைத் தடுப்பூசியின் கூடுதல் விநியோகிப்பில் சபாவிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கைரி தெரிவித்தார்.

சபா, பூலாவ் லாராபான்-னிலுள்ள மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

 179 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *