சுங்கைப்பட்டாணி, கெடா. செப் 4 கோரோனா நச்சு தொற்று தாக்கத்தால் மதிப்புற்றிருக்கும் மலேசிய திராவிடர் கழக கெடா மாநில கிளைத் தலைவர்கள் ,அரசு சாரா இயக்க தலைவர்கள் ஆலயத் தலைவர்கள் 50 பேருக்கும் உணவு பொட்டலங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
ம. தி. க கெடா மாநிலத் தலைவர் கதிரவன் வடிவேலு அவர்கள் ஏற்பாட்டில், ம. தி. க கெடா மாநிலம் மற்றும் சூரியன் நிறுவனத்தின் உதவியோடு இவ்வுதவி வழங்கப்பட்டது.
உதவி தேவைப்படும் அனைவருக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வரும் மதிக கெடா மாநிலத் தலைவர் கதிரவன் வடிவேலு இம்மாதிரியான பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென மதிக கிளைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
உதவி பெற்றுக்கொண்ட அனைவரும் மதிக கெடா மாநில தலைவருக்கும் சூரியன் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
285 total views, 1 views today