புத்ரா ஜெயா செப் 1
12 வது மலேசிய திட்டத்தை வரும் செப் 27 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 12 வது மலேசிய திட்டம் 100 விழுக்காடு முடிவடையும் நிலையில் இருப்பதாக பிரதமர் இலாகா அமைச்சர் (பொருளாதாரம் ) டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் கூறினார்.
12 வது மலேசிய திட்டத்தின் ஆக கடைசி நிலவரம் குறித்து பொருளாதார திட்ட பிரிவு பிரதமருக்கு விளக்கமளிக்கும் என்றார் அவர்.
அடுத்த 100 நாட்களில் 12 வது மலேசிய திட்டம் மற்றும் 2020 மேம்பாட்டு திட்டம் மக்களவையில் தாக்கல் செய்வது குறித்து பொருளாதார திட்ட பிரிவு தீவிர கவனம் செலுத்தும் என்றார் அவர்.
177 total views, 1 views today