பினாங்கு, ஆக 30 –
இனம் மொழி பண்பாடு சமயம் என்ற நான்கு கூறுகளில் சீராகவும் செம்மையாகவும் பயணிக்கும் மலேசிய வாழ் மக்கள் அனைவருக்கும் 64 ஆம் ஆண்டு சுதந்திர நாள் வாழ்த்தினை பதிவு செய்வதில் அகம் மலர்கிறேன் என்று பினாங்கு மாநில வர்த்தக பெருமகனாரும், மலேசிய சமூக நலவியல் இயக்கத்தின் தலைவரும், பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க அறங்காவலருமான டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான் கூறினார்.
நாடு, வீடு , மக்கள் என்று தன்னுடைய சமூகவியல் பணிகளை செவ்வனே செய்து வரும் டாக்டர் ஹபீப் மலேசியத் திருநாடு மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளிலும் சமூக சேவைக்கான புகழ் மாலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 64 வது சுதந்திர தின கொண்டாட்டம், கோவிட்-19 நிர்வாக நடைமுறைக்கு ஏற்ப பாதுகாப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்றும், கோவிட்-19 தொற்றை அனைவரின் ஒத்துழைப்போடு ஒரு முடிவுக்கு கொண்டுவருவோம் என்று அனைவரும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி பூணுவோம் என்று அங்காத்தான் பெர்த்தஹானான் மலேசியாவின் கௌரவ கெப்டனுமாகிய டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்
.
202 total views, 1 views today