English Tamil Malay


பெட்டாலிங் ஜெயா ஆக 16
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்ததை தொடர்ந்து ஒரு புதிய அரசாங்கம் அமைவதில் தாமதம் கூடாது என ஜசெகா கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
நாட்டிற்கு அடுத்த பிரதமரை நியமிப்பதில் மாட்சிமை தங்கிய மாமன்னர் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இருப்பினும் தற்போதைய அரசியல் நெருக்கடியில் அடுத்த பிரதமர் நியமனம் பெற எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை என்றார் அவர்.
கோவிட் 19 தொற்றினால் ஒரு நெருக்கடியான காலகட்டத்தை நாம் எதிர்நோக்கி உள்ளோம்.கோவிட் 19 நோயாளிகளின் அதிகரிப்பால் மருத்துவமனைகளின் நிலவரம் மோசமடைந்து உள்ளன.
அதேபோல் மக்களின் வேலை இல்லா திண்டாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் ஒரு புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட்டால் தான் இப்பிரச்சினைகளை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார் அவர்.

 163 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *