ஜூரு ஆக 15-பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு பாலன் முனியாண்டி தலைமையில் இயக்க பொறுப்பாளர்களின்
ஆதரவோடு,
வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வருமானத்தை இழந்து தவிக்கின்ற குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்ற வேளையில்
இன்று குறிப்பாக ஜூரு ,மற்றும் செபராங் ஜெயா மக்களுக்கு சுமார் 200 குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டுக் கழக ஆலோசகரும் சமூக சேவையாளரும் தன்முனைப்பு பேச்சாளருமான அன்பே ஆனந்தம் டாக்டர் குணசேகரன்
மற்றும் அன்புக் கரங்கள் இயக்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான தமிழ் திரு கருணாகரன் ,சமூக சேவகி திருமதி இரஞ்சித மலர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதைப் போல இன்றைய இந்த உணவு அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி வெற்றி பெற தொல் கொடுத்து துணை நின்ற அன்பு நெஞ்சங்களுக்கு இயக்க தலைவர் பாலன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
271 total views, 1 views today