குருண் ஆக 11-கெடா,குருண் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான வளர்ந்து வரும் தொழிலதிபரும், எம்.என்.ஆர் மெலேனியம் டிரேடிங் உரிமையாளரும், ஸ்ரீ அருள்மிகு ஆதிபராசக்தி ஆலய அமைப்பாளருமான திரு ரமேஷ் பூங்காவனம் கோவிட் தொற்று காரணமாக இன்று (11-8-21) காலமானார் என்ற செய்தி அறிந்து தாம் மிகுந்த துயரமடைந்ததாக கோலமூடா மாவட்ட சூரியன் சமூக நல இயக்கத்தலைவர். வ.கதிரவன் தெரிவித்தார்.
ஒரு சிறந்த நண்பரை தாம் இழந்து விட்டதாக வ.கதிரவன் தெரிவித்ததுடன் குருண்,சுங்கை ஈபோரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம் அன்போடு பேசி அரவணைக்கும் பண்பான மனிதர்.
அவரை இழந்து துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்டார்.
அன்னாரின் நல்லுடல் குருண் இந்து மயானத்தில் இறுதிச்சடங்குக்கு பிறகு நாளை (12-8-21) வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும்.
255 total views, 1 views today