கோலாலம்பூர் ஜூலை 31
நாளை ஆகஸ்டு 1ஆம் தேதி முடிவடையவிருந்த சரவாவில் அவசர காலம் பிப்ரவரி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அவசரகால பிரகடனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா அனுமதி வழங்கினார். இந்தப் பிரகடனம் நேற்று முன்தினம் அரசாங்க பதிவேட்டில் பிரசுரிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தப் பிரகடனம் கூட்டரசு சட்டத்தின் பிரிவு 150 பதிவு 3 க்கு ஏற்ப முதலில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
கோவிட் 19 தாக்கத்தால் கூட்டரசில் பாதுகாப்பு, பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் அமைதிக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதால் இந்த மாபெரும் அவசர காலம் அவசியம் என பேரரசர் கருதுவதாக அரசாங்க பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநில அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 3 பதிவு (4) க்கு ஏற்ப மாநில சட்டமன்ற தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதாக அந்த பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
168 total views, 1 views today