ரா.மணியம்
ஸ்கூடாய் ஜூலை 26
இங்கு தாமான் நேசாவில் இயங்கி வரும் விசூரியம் கலைப் பள்ளிக்கு ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் வெ 500 நன்கொடையை வழங்கினார்.
நேற்று இந்த கலைப் பள்ளிக்கு நேரடியாக வருகை புரிந்த அவர் பள்ளியின் இயக்குனர் உஷாராணி கார்த்திகேயனிடம் அந்தத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
ஜொகூர் அரசாங்கத்தின் 3.0 பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்த தொகை தமது பள்ளிக்கு வழங்கப்பட்டதாக உஷாராணி கூறினார்.
கோவிட் 19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசாங்கத்தின் இந்த உதவி தமது சுமையை சற்று குறைக்கும் என்றார் அவர்.
இவ்வேளையில் மந்திரி பெசார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மஸ்லான் பூஜாங், ஜொகூர் பாரு மாவட்ட அதிகாரி அப்துல் ரஹ்மான் சாலே, மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி ரவீன் குமார்,கெலாங் பாத்தா தொகுதி மஇகா தலைவர் டத்தோ கண்ணன், யாயாசான் வாரிசான் ஜொகூர் பிரதிநிதிகள் மற்றும் விசூரம் செயலவை உறுப்பினர்கள் மணிமாறன், லீலா, நந்தா, ஜொகூர் மாநில மஇகா மகளிர் அணி தலைவி சரஸ் ஆகியோருக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.
141 total views, 1 views today