English Tamil Malay


மெர்சிங ஜூலை 19
ஹாஜ் திருநாளை முன்னிட்டு தேசிய முன்னணி தெங்காரோ சட்டமன்ற அலுவலகம் மற்றும் மெர்சிங் அம்னோ தொகுதி ஒன்றிணைந்து இங்குள்ள முஸ்லிம்களுக்கு இறைச்சி அன்பளிப்பு செய்தது.

இங்கு தாமான் ஸ்ரீ மெர்சிங்,தாமான் நக்கோடா,தாமான் வாவாசான்,மெர்சிங் மலிவு விலை வீடு அமைப்பு பகுதி, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், தாமான் நெலாயான் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த மக்களுக்கு இந்த இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவ்வட்டார மக்களுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவீன் குமார் கூறினார்.

இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் வசதி குறைந்தவர்களுக்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து உதவி வருவதாக ஜொகூர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் சொன்னார்.

 114 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *