பட்டர்வொர்த் ஜூலை 17 பினாங்கு பிரபல மலியா பெக்கரி நிறுவன உரிமையாளர் டத்தோ மரியதாஸ் கோபால் மற்றும் தொழிலதிபர் சிவபாலன் அவர்களின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த், பாகான் ஆஜாம் பகுதியில் உள்ள பல்லின பி 40 வசதி குறைந்த குடுப்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை எடுத்து வழங்கினர்.
பெருமளவில் மலேசிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர் அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது அதில் உணவு அவசியமான ஒன்று என்பதால் டாங்ககளின் மூலம் வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் அவர்களுக்கு டாங்ககளின் அன்றாட வாழ்வை நடத்துவதற்கு உதவியாக இருக்கும் என டத்தோ மரியதாஸ் கோபால் கூறினார்.
இதனுடன் மக்களுக்குப் பொருளுதவி வழங்கும் ஏற்பாட்டுக்கு உதவிய தொழிலதிபர் சிவபாலன் மற்றும் தொண்டுழியர்களுக்கு டத்தோ மரியதாஸ் நன்றி கூறினார்.
மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட் 19 பெரும் தொற்று ஒழிய அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டு நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடித்து அனைவரும் ஒத்துழைப்புடன் வழங்கினால் இந்த கோவிட் 19 பெரும் தொற்றிலிருந்து நாடு மீட்சி பெற்று வழக்க நிலைக்குத் திரும்ப அனைவரின் முழு ஒத்துழைப்பு அவசியமானது என டத்தோ மரியதாஸ் கோபால் குறிப்பிட்டார்.
162 total views, 1 views today