பாடாங் செராய் ஜூலை 16-பாடாங் செராய் பகுதியில் உள்ள 2 குடியிருப்பு பகுதிகளுக்கு பொருளுதவிகளை இன்று வழங்கினார் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா.
தாமான் லேஜாண்டா மற்றும் தாமான் செக்கூர் மானிஸ் ஆகிய இரு குடியிருப்பு பகுதியில் உள்ள பி 40 மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக வருகை மேற்கொண்ட மு. கருப்பையா வீட்டுக்கு தேவையான பொருளுதவிகளை அவர் வழங்கி மக்களுக்கு ஆதரவளித்தார்.
வீட்டுக்கான அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவுவதன் மூலமாக மக்கள் அன்றாட வாழ்வுக்குப் பயனாக இருக்கும் என மு. கருப்பையா நம்பிக்கை தெரிவித்தார்.
280 total views, 1 views today