English Tamil Malay


கோலாலம்பூர் ஜூலை 3
நாட்டின் மிகப்பழமை வாய்ந்த கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நிலைமை மோசம் அடைந்துள்ளதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இருப்பினும் இங்கு சிகிச்சைக்கு வரும் கோவிட் 19 நோயாளிகளை மருத்துவமனை திருப்பி அனுப்பாது என கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர் ஹெரீக் தோரே உறுதி அளித்தார்.
செர்டாங்கில் உள்ள மலேசிய விவசாய கண்காட்சி மையத்தின் தனிமைப்படுத்தப்படும் நிலையத்திலிருந்து வரும் ஆபத்தான கோவிட் 19 நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்படுவதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை பற்றாக்குறைகள் இருந்து வருவதாக சமூகவலைத்தள செய்திகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் இந்த பற்றாக்குறைக்கு தீர்வு காண மருத்துவமனையின் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதாக அவர் பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.

 249 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *