English Tamil Malay

ரா. மணியம்
காஹாங் ஜூன் 28
கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு தேவையென ஜொகூர் மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர் வித்தியானந்தன் வலியுறுத்தினார்.
மக்கள் தங்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தடுப்பூசி எழுதிக்கொள்ள தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நேற்று இன்று காஹாங் நகரி கோவிட் 19 தடுப்பூசி பதிவு நடவடிக்கையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.


தடுப்பூசி செலுத்திக் கொள்ள மைசெஜாத்ராவில் பதிவு செய்து கொள்ள தெரியாதவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் உதவி நாட வேண்டும் என காஹாங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் ஆலோசனை கூறினார்.

 192 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *