கோவிட் 19 தொற்றை முற்றாக ஒழிக்க தடுப்பூசி அவசியம்
ஐபிஎப் கட்சியின் தேசிய தகவல் பிரிவு தலைவர் ச. குமரேசன் வலியுறுத்தினார்.
பினாங்கு
ஜூன் 28
ஆர். ரமணி
தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விவகாரத்தில் இந்தியர்கள் அலட்சியப் போக்கை கடைபிடிக்கக் கூடாது என ஐபிஎம் கட்சி பத்திரிக்கைக்கு அனுப்பிய செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துக்கொண்டது.
கோவிட் 19 தொற்று மோசமடைந்து வருவதால் இந்தியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தங்களை விரைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஐபிஎப் கட்சியின் தேசிய தகவல் பிரிவு தலைவர் ச. குமரேசன் வலியுறுத்தினார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசாங்கம் அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது அந்த வாய்ப்பை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடயே நாடு முழுவதும் உள்ள ஐபிஎப் தொகுதியில் உள்ள தகவல் பிரிவு பொறுப்பாளர்கள் தாங்கள் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் மற்றும் தோட்ட புறங்களில் வசிக்கும் இணைய வசதி இல்லாதவர்களுக்கு தாடுப்பூசி பதிவு செய்ய உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுக்கொள்வதாக பத்திரிகை அறிக்கையில் மேலும் பினாங்கு மாநில ஐபிஎம் துணைத் தலைவருமன ச. குமரேசன் கூறினார்.
தடுப்பூசிக்காக விண்ணப்பம் செய்தவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என வழியிறுத்தி கூறிய ச. குமரேசன் தடுப்பூசி பேரும் வாய்ப்பை இழந்தவர்கள் மீண்டும் நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிடும் என அவர் சொன்னார்.
209 total views, 1 views today