ஆர். தசரதன்
கெடா ஜூன் 27-பாடாங் செராய் நாடாளுமன்ற பகுதியில் உள்ள பி40 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மன்றும் மானியம் கொடுத்து உதவினார் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா.
இன்று பாடாங் செராய் நாடாளுமன்ற அலுவலகத்தில் வருகையளித்த மூன்று குடும்பங்கள் மற்றும் பலருக்குப் பொருட்கள் மற்றும் மானியம் வழங்கப்பட்டது.
தற்போது மேலும் நீடிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக மக்கள் பல வகையில் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர், அவர்களின் தேவைக்கு ஏற்ப முடிந்த அளவுக்கு பாடாங் செராய் நாடாளுமன்றத்தின் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மு. கருப்பையா கூறினார்.
தனித்து வாழும் தாய்மார்கள், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு
வருவதாகக் கூறிய மு. கருப்பையா மக்கள் நலனில் அவர்களின் தேவைக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
162 total views, 1 views today