English Tamil Malay

ஆர். தசரதன்

நிபாங் தெபால் ஜூன் 19 மறைந்த ஐபிஎப் கட்சியின் நிபோங் தெபால் தொகுதி துணைத் தலைவரும், செங்காட் ஐபிஎப் கட்சியின் கிளை தலைவருமான கோபால் கண்ணன் அவர்களின் இறுதிச் சடங்கில் திரலானோர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

க. ஏழுமலை

பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் தலைவர் க. ஏழுமலை இறுதி சடங்கில் மாநில பிரதிநிதியாக கலந்துக்கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ச. குமரேசன்

பல காலமாக நோயினால் அவதியுற்று வந்த கோபால் கண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். அன்னாரின் மறைவு செய்தியைக் கேட்டு பினாங்கு மாநிலம், ஐபிஎப் கட்சியின் தலைமையகம் மற்றும் உயர் மட்ட கட்சியின் தலைவர்கள் தங்களின் அனுதாபத்தை மறைந்த க.கோப்பால் அவர்களின் மறைவையொட்டி தெரிவித்துக் கொண்டனர்.

ந. மகேந்திரன்

ஐபிஎப் கட்சியின் நிபோங் தெபால் தொகுதி தலைவர் ந.மகேந்திரன் தமது இரங்கல் செய்தியில், சிறந்த சமூக சேவையாளரான கோபால் அவர்களை ஐபிஎப் நிபாங் தெபால் தொகுதி இழந்துள்ளதாக தனது இரங்கல் செய்தியில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இதனிடையே ஐபிஎப் கட்சியின் தேசிய தகவல் பிரிவு தலைவரான ச.குமரேசன், மறைந்த தொண்டர் க.கோபால் சிறந்த சேவையாளர் என்பதுடன், கடைக்கோடி ஐபிஎப் தொண்டரும் எல்லா உரிமையும் பெற்று வாழ வேண்டும் எனப் பாடுபட்டவர் என தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

கோபால் கண்ணன்

 333 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *