நிபோங் திபால் ஜூன் 18-நிபோங் திபால் வட்டாரத்தை சேர்ந்த சமூக சேவையாளர் டத்தோ சுப்ரா@ சுரேஷ் அவர்களின் மறைவிற்கு மக்கள் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் கலந்துகொண்டு நேற்று கலந்துக்கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். நிபோங் திபால் வாழ் இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமான டாத்தோ சுப்ரா@ சுரேஷ் அவர்கள் கல்வி மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டுப் பல உதவிகளைச் செய்து வந்துள்ளார் என்று நிபோங் திபால் மக்கள் சக்தி கட்சியின் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிக்குமார் கூறினார்.
இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் சிறந்த சேவையாளராகக் கருதப்படும் டாத்தோ சுப்ரா@சுரேஷ் அவர்களின் திடீர் மறைவு வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டார்.
இதனிடையே டத்தோ சுப்ரா@ சுரேஷ் இறுதி அஞ்சலியில் செபராங் பிறை பொது பாதுகாப்பு அமைச்சு அதிகாரி கெப்டன் ராம், பினாங்கு மாநில மக்கள் சக்தி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் லோகேன்,நிபோங் திபால் மக்கள் சக்தி தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார், நிபோங் திபால் தகவல் அமைச்சு அதிகாரி ரோக்கிமான், மக்கள் சக்தி கட்சியின் நிபோங் திபால் தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் சுகுமாரன், செபராங் பிறை தென் மாவட்ட கல்வி அமைச்சு பிரதிநிதி பாரிட் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்க்கொண்டனர்.
266 total views, 1 views today