கோலாலம்பூர் ஜூன்16
தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்தர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ வகைகள் கொரோனா முதல் இரண்டாம் அலையில் அரசு மருத்துவமனை, கோவிட் மையங்களில் நோய் துறை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் பங்காற்றியது.
சித்த ஆயுர்வேதத்தினால் உலக மக்கள் பயன்பெறும் வகையில் உலக சுகாதார அமைப்பிற்கு தமிழக அரசு மருத்துவமனை கோவில் பராமரிப்பு நிலையங்களில் நோய்தொற்று ஏற்பட்டு குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பித்து அதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற வேண்டுமென ஆயுஸ் கவுன்சில் மற்றும் உலக தமிழ் வம்சாவளி அமைப்பு கேட்டுக்கொண்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40 சித்த ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி கல்லூரிகளில் பயிலும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்ன உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் கூறினார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றார் அவர்.
இந்நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவர இந்த பாரம்பரிய மருத்துவம் பெரிதும் பங்காற்ற முடியும் என இந்தியாவின் ஆயுஸ் மற்றும் தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் எம்ஜிஆர் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 40 சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி கல்லூரிகளில் பையிலும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் உயரும் என செல்வகுமார் கேட்டுக்கொண்டார்.
158 total views, 1 views today