ஜோகூர்பாரு ஜூன் 11-மக்கள் வசிக்கும் அருகாமைப் பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள்
ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மக்கள் கோவிட் 19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இருக்க இது மிக அவசியம் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் தினசரி தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் அவசியம் என பக்காத்தான் ஹாராப்பான் பொக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
தற்போது நாளள் ஓன்றுக்கு 70 ஆயிரம் தடுப்பூசி தான் செலுத்தப்பட்டு வருகிறது இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு என அவர் சுட்டிக்காட்டினார்.
352 total views, 1 views today