English Tamil Malay

வெகு ஜனமக்களைச் சென்று சேர எழுத்தாளர் சங்கத்தின் கட்டுரைப் போட்டி தளம் அமைக்கும்.

  • துணைக் கல்வியமைச்சர் வோங் கா வோ நம்பிக்கை.
    தைப்பிங் செப் 2.

மலேசியத் தமிழ் மொழி, தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு ஆசிரியர்களின் கருத்துக்களும் பங்களிப்பும் இன்றியமையாததாகும். ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு கட்டுரைப் போட்டி அதற்கான தளமாக இருக்கும் என்று துணைக் கல்வியமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் கட்டுரைகளை த் தமிழ்ப் புத்தகங்களாகவும் பின்னர் டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் உதவியுடன் மலாய் புத்தகங்களாகவும் வெளியீடு செய்ய முடிவு செய்துள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன் என்று துணையமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத்தின் ஆதரவில்
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டியை
துணைக் கல்வியமைச்சர் வோங் கா வோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தைப்பிங்கில் உள்ள துணைக் கல்வியமைச்சரின் சேவை மையத்தில் நடைப்பெற்ற் அதிகாரப்பூர்வத் தொடக்கவிழாவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மூத்த எழுத்தாளர் தைப்பிங்கைச் சேர்ந்த நிலாவண்ணன் துணையமைச்சருக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி த் தலையாசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ். எஸ். பாண்டியன், பொதுச் செயலாளர் தமிழரசு சுப்ரமணியம், பேராக் மாநிலத் துணைத் தலைவர் ஆந்திராகாந்தி ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இந்தப் போட்டியின் தலைப்பு, விதிமுறைகள், பரிசு குறித்த முழுத் தகவல்களும் தலையாசிரியர்களின் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதோடு, தகவல் ஊடகங்களின் வழி இப்போட்டித் தொடர்பான தகவல்கள் பகிரப்படும்.

மலேசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பார்கள் என நம்புவதாக தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரும்வோங் கா வோ நம்பிக்கைத் தெரிவித்தார்.

நாடுதழுவிய நிலையில் உள்ள தமிழாசிரியர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த தளம் உருவாக்கப்படும்.
அதோடு தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கு அவர்கள் முன்வைக்கும் கருத்துகள் வெகு ஜனமக்களைச் சென்று சேர தளமாக அமையும்.
ஆசிரியர்களுக்கான “கட்டுரைப் போட்டி” ஏற்பாடு செய்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றத்திற்கும் துணையமைச்சர் வாழ்த்துகளத் தெரிவித்துக் கொண்டார்.

ஆண்டுத் திட்டமாக மலரும்.

“எழுத்தறிவித்தவன் இறைவனாவன்” இறைகளோடு இணைந்து பயணிக்க மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எடுத்துள்ள இந்தக் கன்னி முயற்சிக்கு தமிழாசியர்கள் பேராதரவு வழங்க வேண்டும்.

இத்திட்டம் வெற்றிபெறும் என சங்கம் உறுதியாக நம்புகிறது.

நாம் திட்டமிட்டப்படி இந்தப் போட்டி வெற்றிபெறும் பட்சத்தில் இதனை ஆண்டு நிகழ்வாக கட்டமைக்க முடியும் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.

திருமதி வணிதா இராமகிருஷ்ணன் நெறியாளராக வழி நடத்திய இந்நிகழ்ச்சி, சங்கச் செயலாளர் குமாரி சாந்தா காளியப்பன் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது.அதிகாரப்பூர்வத் தொடக்க விழா நிகழ்வில் மேனாள் தலைவரும் அயலகக்குழுத் தலைவருமான இராஜேந்திரன், பேராக் மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் நா.கு.முல்லைச்செல்வன், வழக்கறிஞர் மதியழகன், கல்வியமைச்சின் உயர் அதிகாரி மகேந்திரன் நவமணி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மலேசியத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் தமிழாசிரியர்கள் பார்வையளார்களாக மட்டுமில்லாமல், பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும் என்று தேசிய அளவிலான தலைமையாசிரியர்கள் மன்றக் கூட்டத்தில் மோகனன் முன்வைத்த கோரிக்கையை, தலைமையாசிரியர் மன்றம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டது.

எழுத்தாளர் சங்கத்துடன் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் இணைந்து பணியாற்றுவோம் முடிவு செய்தது என்று எஸ். எஸ். பாண்டியன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சித் தொடர்பான எல்லா கூட்டங்களிலும் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதை அவர் உறுதி செய்தார்.

சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை எழுதும் போட்டியில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என எஸ்.எஸ். பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

சங்கத்தின் துணைச் செயலாளர் சபா கணேஷ் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

 97 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *