English Tamil Malay

கிள்ளான் செப் 7- தனது உறுப்பினர்களின் மாதாந்திர சந்தா பணத்தை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதை நிறுத்தியுள்ள எஸ்டி காத்ரி நிறுவனத்தின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை தேசிய பல நோக்குக் கூட்டுறவு கழகம் கடுமையாக சாடியது.

தொழிலாளர்களின் நலங்களுக்கு எதிர்ப்பாக கருதப்படும் எஸ்டி காத்ரியின் இந்த செயல் அவமானகரமான ஒன்று என தேசிய பலநோக்குக் கூட்டுறவு கழகம் பெர்ஹாட் செயலாளர் குணசேகரன் நாச்சியப்பன் கூறினார்.
இன்று கிள்ளானில் வின்டம் அக்மார் தங்கும் விடுதியில் 18,000 வலிமையான உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பலநோக்குக் கூட்டுறவு கழகத்தின் 46 ஆவது ஆண்டு கூட்டத்தில் அவர் பேசினார்.
எஸ்டி காத்ரி நிறுவனத்தின் இந்த முற்போக்கான நடவடிக்கையினால் 749 தொழிலாளர்கள் இந்த கூட்டுறவு கழகத்திலிருந்து கிடைக்கப்படும் அனைத்து சலுகைகளும் இழக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய பலநோக்குக் கூட்டுறவு கழக உறுப்பினர்களுக்கு தங்களுடைய சேமிப்பிலிருந்து கடந்த 1996 முதல் 2015 8 % லாப ஈவு வழங்கப்பட்டு வந்துள்ளது. பிறகு 2016 முதல் 2021 வரை 5 % மற்றும் 2022 முதல் 6 % வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்
இதைத் தவிர்த்து கடன்கள், திருமண சலுகைகள், மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் இதர சலுகைகளை எங்களின் கூட்டுறவு கழகம் வழங்கி வருகிறது.
மேலும் உறுப்பினர்களுக்கு மரணம் மற்றும் சமூக நல திட்டமும் உண்டு.
தனது உறுப்பினர்களுக்கு வெ 25,000 தனிப்பட்ட விபத்து காப்புறுதி திட்டமும் உண்டு என்றார் அவர்.

எஸ்டி காத்ரியின் இந்த சம்பளத்திலிருந்து செய்வதை நிறுத்துவதால் இந்த கூட்டுறவு கழகத்திலிருந்து கிடைக்க பெறும் சலுகைகளை இந்த உறுப்பினர்கள் இழக்கின்றனர் என அவர் சொன்னார்.
தொழிலாளர்களின் இந்த சந்தா பணத்தை வங்கியிலிருந்து ஆன்லைன் மூலம் பிடித்தம் செய்ய செய்ய எஸ்டி காத்ரி இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அது வெற்றி பெறவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஏற்பாட்டில் தொழிலாளர்களின் அதிருப்தி, தொழிலாளர்கள் வங்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உட்பட பல காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆகையால் எஸ்டி காத்ரியின் இந்த முடிவை எங்களின் உறுப்பினர்கள் (எஸ்டி காத்ரி தொழிலாளர்கள்) எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மீண்டும் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் நடைமுறையை கொண்டு வரும்படி முறையீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வங்கியிலிருந்து பிடித்தம் செய்யும் தகவலை கேட்டதை தொடர்ந்து, பல உறுப்பினர்கள்/தொழிலாளர்கள் தங்களின் சேமிப்புகளை மீட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்டி காத்ரியின் இந்த தன்முப்பான நடவடிக்கை நாள் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்திற்கான சேமிப்புகளும் இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் ஏற்கனவே உள்ள நடைமுறையை எஸ்டி காத்ரி நிறுவனம் கொண்டுவர மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என குணசேகரன் கேட்டுக்கொண்டார்.இதனிடையே தேசிய பலநோக்குக் கூட்டுறவு கழகம் கடந்த 29 ஆண்டுகளாக லாபகரமாக செயல்பட்டு வருவதோடு, வெ 160 மில்லியன் சொத்துக்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு லாப ஈவு மற்றும் போனஸ் பங்குகளை வழங்கி வருகிறது.
மேலும் புதிதாக புசாட் பாண்டார் கிள்ளானில் 3 மாடிக்கொண்ட 3 கட்டிடங்களை வாங்கியுள்ளது.
அத்தோடு கிளாந்தானில் 1024 ஏக்கர் கேஎஸ்கேபி தோட்டம், பகாங்கில் 111.11 ஏக்கர் லோக் லியான் தோட்டம் மற்றும் கெடாவில் 5.2 ஏக்கர் மாஹாங் தோட்டம் தேசிய பல்நோக்குக் கூட்டுறவு கழகத்திற்கு சொந்தமானது.
இந்தத் தோட்டங்களின் வழி ஆண்டுதோறும் வெ 2,945,362 வருமானத்தை நாங்கள் பெற்று வருகிறோம்.
இது மட்டுமின்றி தனது உறுப்பினர்களுக்கு இந்த கூட்டுறவு கழகம் வெ 11,357,046 கடன்களை வழங்கி உள்ளது. இதிலிருந்து நாங்கள் வெ 3,265,170 வட்டியை லாபமாக பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மலேசியாவில் 100 சிறந்த கூட்டுறவு கழகம் வரிசையில் இடம்பெற்றுள்ளோம் என அவர் சொன்னார்.

 68 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *