English Tamil Malay

செபராங் ஜெயா மார்ச் 4- பினாங்கு மாநில ஐபிஎப் மகளிர் பகுதி மற்றும் இளைஞர் பகுதி ஏற்பாட்டில் பாடு ( PADU ) பதிவு வட்டார பொது மக்களின் வசதிக்காக செபராங் ஜெயா துனா ஒற்றுமை துறை இயக்க சமூக மண்டபத்தில்  3-3-2024 காலை மணி 9.00 தொடக்கம் மாலை மணி 4.00க்கு வரை அரசாங்க பாடு அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்றது.

இந்த பதிவு நிகழ்ச்சியில் சுமார் 165 குடும்பத் தலைவர்கள் தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்து கொண்டனர் என்று நிகழ்ச்சியை எற்பாடு செய்த ஐபிஎப் பினாங்கு மாநில இளைஞர் பகுதி தலைவர் அருள்மணி அர்ஜுனன் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்த நிகழ்வில் இந்தியர்கள், சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் என அனைத்து இனத்தவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் என்று ஐபிஎப் பினாங்கு மாநில மகளிர் பகுதி தலைவி திருமதி வி.சாந்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஐபிஎப் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ கு.வேலாயுதம், ஐபிஎப் பினாங்கு மாநில தலைவர்  ச.குமரேசன், ஐபிஎப் பினாங்கு மாநில துணைத் தலைவர் அர்ஜுனன், தேசிய மகளிர் பகுதி துணைத்தலைவி திருமதி சரஸ்வதி,‌ பினாங்கு மாநில எம் ஜி ஆர் மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் எல் ஆர்.சிவபாலன் மற்றும் ஐபிஎப் பினாங்கு மாநில இளைஞர் மகளிர் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

 24 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *