English Tamil Malay

சியோல் ஏப் 17 ஆவது சமாதானம் மற்றும் போர் நிறுத்த பிரகடன நினைவு விழா கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உலகளவில் கொண்டாடப்பட்டது.

தென் கொரியா சியோலில் தளமாகக் கொண்ட உலக சமாதான இயக்கமான(HWPL) இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியா முதல் 41 நாடுகளில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.

அரசியல், சட்ட நிபுணத்துவம், சமயம், கல்வி, ஊடகம், மகளிர் மற்றும் இளைஞர்கள் ஆகிய தரப்புகளைச் சார்ந்த சுமார் 7,000 பேர் இந்த சமாதான கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாடுகள் மற்றும் சமூகங்களுக்கிடையே சமாதானம் மற்றும் போர் நிறுத்தம் ஆகியவை இந்த கொண்டாட்டத்தில் முக்கிய கருப்பொருளாக அமைந்தது.

உலக அமைதி மற்றும் சமாதானம் தான் அனைவருக்கும் தேவைப்படுவதாக டாக்கா பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சட்டப்பிரிவு தலைவர் டாக்டர் முகமட் நஸ்ருல் இஸ்லாம் கொண்டாட்ட செய்தியில் கூறினார்.சமாதானம் மற்றும் போர் நிறுத்த பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என இந்திய வழக்கறிஞர்கள் மன்ற தலைவர் பிரவின் பாரெக் கொண்டாட்ட செய்தியில் குறிப்பிட்டார்.

உலக சமாதானம் மற்றும் அமைதிக்கு HWPL இயக்கம் கடுமையாகப் பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.புரிந்துணர்வு மற்றும் சகிப்புத் தன்மையை ஊக்குவிக்க சமய தலைவர்களுக்கிடையே தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என கொரிய பௌத்த இயக்க உதவி தலைவர் மியோங் ஆன் தமது கொண்டாட்ட செய்தியில் தெரிவித்தார்.

உக்ரேன் மீது ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கைவிடும் படி 100 நாடுகளைச் சார்ந்த பேராளர்கள் ரஷ்ய அதிபர் வால்டமர் புட்டினுக்கு சமாதான கடிதங்களை எழுத வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனுடைய உலக நாடுகள் ஒன்றிணைந்தால் தான் அமைதி மற்றும் சமாதானம் கிடைக்கப் பெறும் என HWPL தலைவர் லீ மான் ஹீ (Lee Man Hee) கூறினார்.உலகளவில் போர் மற்றும் சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாம்  அனைவரும் சமாதான தூதர்களாகச் செயல்பட்டால் தான் இதை அடைய முடியும் என்றார் அவர்.

 368 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *