English Tamil Malay


சுங்கை பூலோ நவ 7
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால், தமது எம்பி அலாவன்ஸில் 1 வெள்ளி கூட நாம் நினைத்துக் கொள்ள போவதில்லை என இந்த தொகுதிக்கான பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

மாறாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சம்பளத்தை தொகுதியில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்,இந்து மற்றும் சீன கோயில்களின் பயனீட்டிற்கு வழங்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சேவைகளை வழங்க ஒரு அமைச்சர் தேவை இல்லை என்றார் அவர்.
காரணம் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தின் கீழ் உள்ளதால், இங்குள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு பாயா ஜாராஸில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால், சுங்கை பூலோவில் அடிப்படை வசதிகளை தாம் மேம்பாடுத்த போவதாக அவர் உறுதியளித்தார்.

மேலும் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் இளைஞர்களுக்கு ஒரு விளையாட்டு மையத்தை தாம் கட்டி தர போவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே தமக்கு வேறு தொகுதி வழங்கப்படாததால் தான் கைரி ஜமாலுடின் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வந்துள்ளதாக பிகேஆர் தகவல் பிரிவு துணைத் தலைவருமான ரமணன் கூறினார்.

 128 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *