English Tamil Malay

செபராங் ஜெயாஅக் 23-
தேசிய முன்னணியில் ஆதரவு கட்சியாக இருக்கும் பெர்மாத்தாங் பாங் ஐபிஎப் தொகுதி தேர்தல் இயந்திரம் திறப்பு விழா கண்டது.


பெர்மாத்தாங் பாவ் ஐபிஎம் கட்சியின் தொகுதி தலைவர் டாக்டர் ச.குமரேசன் அவர்கள் இந்த தேர்தல் இயந்திர தொடக்க விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார்.
மக்களுக்கு உரியச் சேவையை ஆற்றி வரும் தேசிய முன்னணியின் 15 பொதுத் தேர்தலுக்கு ஆதரவாக இருந்து செயல்படப் போவதாக அவர் சூளுரைத்தார்.


நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய முன்னணி ஆற்றிய பங்கு அளப்பரியது என்றும் தொடர்ந்து தேசிய முன்னணிக்கு ஐபிஎப் விசுவாசமாக இருக்குமென அவர் உறுதியளித்தார்.

இந்த பெர்மாத்தாங் பாவ் தேர்தல் இயந்திர அலுவலகத்தை பெர்மாத்தாங் பாவ் அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோ ஹாஜி சாயிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.


60 ஆண்டுகள் நாட்டின் தலைமைத்துவத்தை வழி நடத்திய தேசிய முன்னணி அனைத்து இன நலன்களுக்கும் உரிய உதவிகளை வழங்கி வந்துள்ளது மறுப்பதற்கில்லை,மாறாக நாட்டில் அரசியல் நிலைத்தன்மை அதிகரிக்க வழுவான தலைமைத்துவம் அவசியம் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 பி40 வசதிக் குறைந்த மக்களுக்கு உதவி பொருட்கள் மற்றும் பண அன்பளிப்பையும் டத்தோ ஹாஜி சாயிடி எடுத்து வழங்கி ஆதரவளித்தார்.


உடன் பெர்மாத்தாங் தொகுதியில் உள்ள 4 இந்து ஆலயங்களான செபராங் ஜெயா அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம்,அனைத்துலக மலேசியக் கிருஷ்ணா இயக்கம்,செபராங்ஜெயா தேவி ஸ்ரீ மகா வீரபத்திர காளியம்மன் ஆலயம் மற்றும் பட்டர்வொர்த் தித்தி திம்போல் ஸ்ரீ் மகா மாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு தலா வெ 10,000 வழங்குவதாக டத்தோ ஹாஜி சாயிடி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 122 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *