English Tamil Malay

சிரம்பான் ஜெயா அக் 6
இங்கு டூசுன் நியூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமான பணிக்கு பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் வெ 50,000 நன்கொடை வழங்கினார்.

இந்த ஆலய கட்டுமான பணிக்கு மொத்தம் வெ 3 லட்சம் தேவைப்படுவதாக பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.

இந்திய சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ள முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இந்தத் தொகையை வழங்கியது மகிழ்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலயம் வெற்றியுடன் கட்டி முடிக்க அனைத்து தரப்பினரும் நிதி உதவி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருன் தலைமையிலான மாநில பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இந்திய சமூகத்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆலய தலைவர் போயூ, ஆலய செயலாளர் காளியப்பன் மற்றும் ஜசெக ராஹாங் பெசார் கிளை தலைவர் நாகேஷ் மாறன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 113 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *