நிபோங் தெபால் ஜூன் 27
இங்கு தாமான் விடுரியில் தனித்து வாழும் தாயான கவிதாவிற்கு நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சி உதவிக்கரம் நீட்டியது.
ஜாவியில் தமது பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப பணம் இல்லாமல் கவிதா சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சியின் தலைவர் மாஸ்டர் கவிக்குமார் கூறினார்.
தமது பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப மாதமொன்றுக்கு 100 வெள்ளி வழங்க அந்த தனித்து வாழும் தாய்க்கு தாம் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பிள்ளையை வேனில் பள்ளிக்கு அனுப்ப அந்த தனித்து வாழும் தாய்க்கு இந்த தொகை உதவுமென அவர் குறிப்பிட்டார்.
133 total views, 1 views today