கோலாலம்பூர் ஜன 22
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஐஜேஎன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் நிலவரத்தை கண்டறிய ஐஜேஎன் வளாகத்தில் முகாமிட்டுள்ளனர்.
ஐஜேஎன் தீவிர சிகிச்சைப் பிரிவில் மகாதீர் கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.
இருப்பினும் முன்னாள் பிரதமரின் நிலவரம் குறித்து
விரைவில் ஒரு பத்திரிகை அறிக்கை வெளியிடப்படும் என ஐஜேஎன் கூறியுள்ளது.
கடந்த ஜன 7 ஆம் தேதி ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்ட மகாதீர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜன 13 ஆம் தேதி அங்கிருந்து வெளியேறினார்.
176 total views, 1 views today