கோலாலம்பூர் ஜன 22
எம்ஏசிசி தலைவர் அஸாம் பாக்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தலைநகரில் இன்று நடத்தப்பட்ட பேரணியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதிலும், இந்த எண்ணிக்கை குறித்து தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக பேரணியின் பேச்சாளர் ஃபர்ஹான் அம்ரான் கூறினார்.
எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா என்பது மக்கள் மற்றும் அரசாங்கத்தை பொருத்தது என்றார் அவர்.
இந்த பேரணியின் மூலம் எங்களின் கோரிக்கை என்ன என்பது அரசாங்கத்திற்கு தெரியும்.
இது தான் எங்களின் தொடக்கம். இதுபோன்று மற்றொரு பேரணி நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய பேரணியை முன்னிட்டு தலைநகரில் உள்ள பெரும்பாலான சாலைகளை போலீசார் மூடினர்.
பெரும்பாலான இளைஞர்கள் அஸாம் பாக்கியை உடனடியாக கைது செய்யும்படி சுவரொட்டிகளை ஏந்திச் சென்றனர்.
207 total views, 1 views today